ஜமைக்கா நாட்டில் ஆசிரியர் கூட்டமைப்பு மாநாடு ஒன்று சூம் வழியாக நடந்து கொண்டிருந்த போது, ஆசிரியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்ட காட்சி வெளியாகி சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சூம் கலந்துரையாடலில் ஆசிரியை ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
“கொரோனா நேரத்தில் ஆசிரியர் பணி செய்வதே கடினமாகிவிட்டது“ என அவர் புலம்பிக் கொண்டிருக்க, இன்னொரு ஆசிரியர் படுக்கையில் பெண்ணொருவருடன் உடலுறவில் ஈடுபட்ட காட்சியுடன், முணகல் சத்தமும் ஒலித்தது.
சுமார் 2 நிமிடங்கள் இந்த காட்சி ஒளிபரப்பானது.
இதனால் அதில் கலந்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில், இருவர் அந்த ஜோடியை எச்சரிக்கும் விதமாக சத்தமிட்டனர். அத்துடன், அந்த கலந்துரையாடல் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
முடக்க காலத்தில் சூம் கலந்துரையாடல்களின் போது, இப்படி ஏடாகூடமாக நடந்து ஜோடிகள் சிக்கிக் கொள்வது இது முதல் முறை அல்ல.
கடந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த மெய்நிகர் நகர கவுன்சில் கூட்டத்தில் ஒரு ஊழியர் உடலுறவில் ஈடுபட்டார்.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உரிமைகள் பற்றி, பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான ரியோ டி ஜெனிரோவின் நகர கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அது.
கலந்துரையாடலின் போது, பணியாளர் படுக்கையில் நிர்வாணமாக ஒரு பெண்ணுடன் இருந்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இதை அறியாத தம்பதியினர் “காரியத்தில் கண்ணாயிருந்தனர்“.
அமெரிக்காவின் விற்பனையாளரும் சட்ட நிபுணருமான ஜெஃப்ரி டூபின் கடந்த ஆண்டு தேர்தல் முன்னாயத்த கூட்டத்தின் போது சுயஇன்பம் செய்வது டன்,, தனது சக ஊழியர்களில் ஒருவரல்லாத ஒருவரை முத்தமிட்டார்.
கமரா திருப்பி வைக்கப்பட்டதென நினைத்து அவர் அவ்வாறு நடந்ததாக பின்னர் தெரிவித்து, மன்னிப்பு கேட்டார்: “நான் கமராவுக்கு வெளியே இருப்பதாக நம்பி நான் ஒரு தர்மசங்கடமான முட்டாள்தனமான தவறைச் செய்தேன். என் மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.” என தெரிவித்திருந்தார்.