27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பன்டோரா பேப்பர்ஸ் விசாரணைக்கு தகவல்கள் வழங்க தயார்: நிரூபமாவிற்கு புதிய தலையிடி கொடுத்தார் ரஞ்சன்!

பன்டோரா பேப்பர்களில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீதான விசாரணைகளில், தனக்கு தெரிந்த தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு தனது சட்டத்தரணி மூலம் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் ஆவணங்கள் பண்டோரா பேப்பர்ஸில் வெளியாகியிருந்தது.

இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு, ரஞ்சன் அனுப்பிய கடிதத்தில்,  குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க தற்போது 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment