பன்டோரா பேப்பர்களில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீதான விசாரணைகளில், தனக்கு தெரிந்த தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு தனது சட்டத்தரணி மூலம் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் ஆவணங்கள் பண்டோரா பேப்பர்ஸில் வெளியாகியிருந்தது.
இந்த வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு, ரஞ்சன் அனுப்பிய கடிதத்தில், குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க தற்போது 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.