31.3 C
Jaffna
March 28, 2024
உலகம்

அம்பு, வில் தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்!

நோர்வேயின் காங்ஸ்பெர்க் நகரில் வில் மற்றும் அம்பு தாக்குதல் நடத்தி 5 பேரை கொலை செய்தவர், டென்மார்க்கை சேர்ந்த 37 வயதான எஸ்பென் ஆண்டர்சன் ப்ரெடென் என்று பெயரிடப்பட்டுள்ளார்.

அவரது நடவடிக்கை “பயங்கரவாதச் செயல்” என்று பொலிசார்ர் கூறினர்.

பலியானவர்களில் நான்கு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர். ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார்.

நோர்வேயின் பாதுகாப்பு சேவையான பிஎஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காங்ஸ்பெர்க்கில் நடந்த சம்பவங்கள் தற்போது பயங்கரவாத செயலாகத் தோன்றுகின்றன” என குறிப்பிட்டுள்ளது. எனினும், விசாரணைகள் நடந்து வருகிறது.

ப்ரெடென் கடந்த காலத்தில் பல முறை குற்றவாளியாக தண்டிக்கப்பட்டுள்ளார். அத்துடன், தீவிரமயமாக்கலின் அறிகுறிகளைக் காண்பிப்பதாக அடையாளம் காணப்பட்டார்.

கடந்த ஆண்டு இரு குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால், அவருக்கு ஆறு மாத தடை உத்தரவு வழங்கப்பட்டது.

ப்ரெட்டன் 2012 இல் திருட்டு மற்றும் கஞ்சா வைத்திருந்ததற்காக தண்டிக்கப்பட்டார்.

ப்ரெட்டன் இஸ்லாமிற்கு மதம் மாறுவது பற்றி யூடியூப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

ப்ரூதனின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேலும் வன்முறைச் செயல்களை “ஊக்குவிக்க” முடியுமா என்று விசாரிப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment