இளம் தாயார் ஒருவர் சாகசம் என்ற பெயரில் கீழே குதித்துப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலரின் மனத்தை உலுக்கியுள்ளது.
அந்தத் துயரமான சம்பவம் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று கஸகஸ்தானில் நடந்தது.
32 வயதான எவ்ஜீனியா லியோன்டீவாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
உள்ள ஒரு ஹோட்டலின் கூரை விளிம்பில் லியோன்டீவா தைரியமான குதித்துச் சாகசம் புரியத் தயாராகிக் கொண்டிருந்ததைக் காட்சிகள் காட்டுகின்றன.
இதுபோன்ற கயிற்றைக் கொண்டு குதிக்கும் விளையாட்டுகளில் லியோன்டீவா ஏற்கனவே பங்கு பெற்றிருக்கிறார்.
லியோன்டீவாவைப் போலவே அன்று பல உள்ளூர்வாசிகள் குதிக்கத் தயாராகி வந்தனர்.
குதித்த லியோன்டீவா, சில நிமிடங்களுக்குப் பிறகு, துரதிஷ்டவசமாக, பூமியிலிருந்து 82 அடி உயரத்தில் ஒரு சுவரில் மோதினார்.
அவரைப் பற்றியிருந்த கயிறு சரியாக மரத்தில் கட்டப்படாததால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கீழே இருந்த பார்வையாளர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டார். அந்த பெண் தலையில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கவனக்குறைவாகச் செயல்பட்ட ஏற்பாட்டாளர்கள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.