2021 ஆம் ஆண்டிற்கான புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் வருவாய் ஓகஸ்ட் மாத இறுதியில், கடந்த ஆண்டை விட 74 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஓகஸ்ட் நிலவரப்படி ரூ .2.02 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
சுரங்கத்திற்கான அனுமதிகள், மணல், சரளை மற்றும் மண் கொண்டு செல்வதற்கான உரிமங்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்கள் வழங்குவதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது.
புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் இந்த ஆண்டு மணல், சரளை மற்றும் மண் போக்குவரத்துக்கு 777,000 உரிமங்களை வழங்கியுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் போக்குவரத்து உரிமங்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டும்.
மேலும், பணியகம் 12 ஆய்வு அனுமதிகள், 1,856 தொழில்துறை அனுமதிகள், 281 வர்த்தக அனுமதிகள் மற்றும் 374 ஏற்றுமதி அனுமதிகளை வழங்கியுள்ளது.