கிழக்கு

நியூசிலாந்து புறப்பட தயாரான 64 பேருக்கு விளக்கமறியல்!

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதற்காக திருகோணமலையில் தங்கியிருந்த 67 பேரில் 64 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு பிணை வழங்குமாறும் திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (13) குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களாக திருகோணமலை ஒரு மலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது அரசாங்க புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்களை நேற்று கைது செய்ததாகவும் தெரியவருகின்றது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 வயது உடைய தாய், 14 வயதுடைய மகன் மற்றும் 9 வயதுடைய மகள் ஆகியோருக்கு ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளை இட்டுள்ளது.

-அப்துல்சலாம் யாசீம்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டு-கல்முனை வீதியில் விபத்து: தொழில் நுட்ப கல்லூரி மாணவன் ஸ்தலத்தில் பலி

Pagetamil

கல்முனையில் உணவங்களில் திடீர் சோதனை: மூவர் மீது சட்டநடவடிக்கை

Pagetamil

காணிகளிலிருந்து வெளியேறுமாறு மிரட்டும் வன இலாகா!

Pagetamil

காதலியின் தாயாரை டிக்டொக்கில் வெருட்டிய 17 வயது காதலன் கைது!

Pagetamil

மட்டக்களப்பு குருக்களிடம் பொலிஸ் வேடத்தில் கொள்ளை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!