வவுனியாவில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்ததுடன், 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றில் அமைந்துள்ள நகை கடைகள், உணவகங்கள், புடவைக் கடவைகள், பன்சிக் கடைகள், பலசரக்கு கடைகள், வெற்றிலை விற்பனை நிலையங்கள், பேக்கரி, நகை அடைவு பிடிக்கும் கடைகள், தோல் உற்பத்திப் பொருள் விற்பனையகங்கள் என்பன சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டதுடன், சமூக இடைவெளி பேணாமை மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை சீராக பின்பற்றாமை தொடர்பில் பல வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1