தெற்காசிய கால்பந்து போட்டியில், இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
5 அணிகள் இடையிலான 13வது தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி மாலைதீவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 107வது வகிக்கும் இந்திய அணி, 205வது இடத்தில் உளள இலங்கையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றியை ருசிக்கும் என்று எதிர்பார்த்தாலும், இலங்கை அணி எல்லா வகையிலும் சிறப்பாக ஆடி, இந்தியாவிற்கு சவால் அளித்தது.
ஆட்டம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. சமனிலையிவ் ஆட்டம் முடிந்தது.
தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில், இரண்டு அணிகளும் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1