அடுத்த இரண்டு வாரங்களில் கோவிட் -19 தொற்றுநோயின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கூறுகிறார்.
சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் பேசியபோது இதனை தெரிவித்தார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்..
தினசரி கொரோனா வைரஸ் தொற்று ண்ணிக்கை 4,000-5,000 முதல் 1,000 ஆக குறைந்துள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கை 50-60 க்கு இடையில் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
தேவைப்பட்டால் தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் மேலும் கடுமையாக்கப்படலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1