பெண்கள் சாரதி பயிற்சி மையத்தில் முதலீடு செய்த ஆப்கானிஸ்தான் பெண் முதலீட்டாளர் நிலாப், பயிற்சி மையத்தில் ஒரு பெண்ணும் பெண்ணும் கலந்து கொள்ளாததால் தனது வியாபாரத்தை மூட திட்டமிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் காவல் மாவட்டம் 10 ல் ஒரு வருடத்திற்கு முன்பு பெண்களுக்கான சாரதி பயிற்சி மையம் திறக்கப்பட்டது.
கடந்த மாதத்தில் எந்த ஒரு பெண்ணும் இந்த மையத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தனது பயிற்சி மையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக நிலாப் கூறுகிறார்.
தலிபான்கள் கையகப்படுத்துவதற்கு முன்பு இந்த மையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெண்கள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் வேலை செய்யவோ அல்லது கல்வி கற்கவோ எந்த தடையும் இல்லை என்று தலிபான் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் யதார்த்தம் அப்படியல்ல.
இஸ்லாமிய மதக் கொள்கைகளின் அடிப்படையில் பெண்கள் வேலை,கல்விக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.