கெடுபிடிகளின் மத்தியிலும் விளக்கேற்றினார் சிவாஜிலிங்கம்!

Date:

தியாக தீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1987ஆம் ஆண்டு 5அம்ச கோரிக்கையை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தியாகதீபம் திலீபன், இதேநாளில் உயிர்நீத்திருந்தார்.

வருடா வருடம் உலகெங்குமுள்ள தமிழ் மக்கள் திலீபனை நினைவுகூர்வது வழக்கம்.

கோட்டாபய அரசு, தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை பலவந்தமாக அடக்க முயன்றாலும், பல பகுதிகளில் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

திலீபனின் உயிர்பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு அஞ்சலிகள் இடம்பெற்றன.

தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, அவரது அலுவலகத்துக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்தனர்.

இந்நிலையிலும், அலுவலகத்தினுள் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்