25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் புகையிரதங்கள் மீண்டும் இயக்கப்படும்

ஒக்டோபர் 1 ஆம் திகதி நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க அரசாங்கம் முடிவு செய்தால், புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க வழிகாட்டுதலின் அடிப்படையில், மாகாணங்களுக்குள் அல்லது மாகாணங்களுக்கு இடையேயான சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை புகையிரத திணைக்கள பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறைகளின் செயல்பாடுகளுக்கும் அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும் என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment