30.7 C
Jaffna
March 29, 2024
இந்தியா

3 மாதக் குழந்தையை ரூ.1.80 இலட்சத்துக்கு விற்ற தாய், தந்தை உட்பட 5 பேர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 3 மாதப் பெண் குழந்தையை ரூ.1.80 இலட்சத்துக்கு விற்பனை செய்த தாய், தந்தை உட்பட 5 பேரை போலீஸார் இன்று (22) கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன்- மீனா தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சனா, சாதனா, பிரியதர்ஷினி, சுபஸ்ரீ உள்ளிட்ட நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு நான்காவதாக பிறந்த சுபஸ்ரீக்கு மூன்று மாதங்களே ஆன நிலையில் அந்தக் குழந்தையை ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த முத்தையன் ஆகியோர் மூலம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ரூ.1.80 லட்சத்துக்கு நேற்று விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது, குழந்தையை விற்பனை செய்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் துரைமுருகன் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் தம்பதியர் குறித்து வடவீக்கம் கிராமத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. கடந்த சில தினங்களாக வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும், தற்போது அந்தக் குழந்தையைக் காணவில்லை என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், பெற்றோர்களிடம் விசாரித்தபோது நான்காவது குழந்தையை விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து கோயம்புத்தூரில் இருந்த 3 மாதப் பெண் குழந்தையை போலீஸார் மீட்டனர். குழந்தை விற்பனையில் ஈடுபட்ட தாய், தந்தை உட்பட 5 பேரைக் கைது செய்த போலீஸார், இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment