வவுனியா பம்பைமடு குளப்பகுதியில் மீன்பிடிக்கச்சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்தநபர் மீன்பிடிப்பதற்காக இன்று காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் குளப் பகுதியில் தேடியுள்ளனர்.
இதன்போது குளக்கரையில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. சிவசோதி (55) என்ற நபரே இவ்வாறு சாவடைந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1