29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

லொஹான் ரத்வத்தைக்கு தண்டனையும், மனநல சிகிச்சையும் அளியுங்கள்!

அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது தமிழ் மக்களின் அரசியலுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் நேராக நீட்டிய துப்பாக்கியாகும் என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலைவரம் குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்பித்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், சிறைச்சாலைகளின் இராஜாங்க அமைச்சர் கடந்த 12ஆம் திகதியன்று, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று, அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து, தலையில் துப்பாக்கியை வைத்து, கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது, தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவும் கருதுவதோடு இத்தகைய அநாகரிகமான செயலை மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைக்கு மதிப்பு அளிக்கின்ற நாடு எனில், குறிபத்த இராஜாங்க அமைச்சரை, அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி, துரித விசாரணைக்கு உட்படுத்தி, உரிய தண்டனை வழங்குவதோடு, அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

‘அதுவே இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு காட்டுகின்ற நல்லெண்ண சமிக்ஞையாக அமையும். இல்லையெனில்,இலங்கை அராங்கமும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கெதிராக செற்;படுகின்றது என்பதையே சுட்டிகாட்டிநிற்கும்’ எனவும், சக்திவேல் குறிப்பட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பான செயற்பாடு ஐ .நா மனித உரிமை பேரவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாகவே அமையும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

‘இராஜாங்க அமைச்சரின் இந்தச் செயற்பாடு நீண்டகாலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்படுவதோடு, வாழ்க்கையில் விரக்தி நிலையும் ஏற்பட்டு அத்தோடு, உளவியல் ரீதியில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ எனவும், அவர் கூறியுள்ளார்.

சிறைச்சாலை கைதிகளை பாதுகாக்க வேண்டிய அமைச்சரே இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், அனைத்து அரசியல் கைதிகளையும் பாதுகாப்பு மிகுந்த தமிழர் பிரதேசங்களில் சிறைச்சாலைக்கு மாற்றி, அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

‘அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை உடனடியாக பாதுகாப்பான தமிழர் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றி பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.

‘அத்துடன், இந்தச் சம்பவத்தை கருத்திற்கொண்டு, தமிழ் அரசியல் பிரதிநிதிகள், இலங்கையில் நடந்த இனப்படுகொலையுடனான இன அழிப்புக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வழியேற்படுத்துமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்லுமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது’ எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment