மேலும் 3,152 கொரோனா தொற்றாளர்கள், இலங்கையின் கொரொனா தொற்றாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 6 முதல் 14 வரை அடையாளம் காணப்பட்டு, கடந்த ஒன்பது நாட்களில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படாமலிருந்தவர்களே இன்று புள்ளிவிபரத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 494,109 ஆக உயர்ந்துள்ளது.
55,288 கொரோனா தொற்றாளர்கள் தற்போது வீடுகளிலும், சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 11,605 பேர் கோவிட் -19 இலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 427,254 ஆக உயர்ந்துள்ளது.



