29.5 C
Jaffna
March 28, 2024
குற்றம்

மனைவியின் கள்ளக்காதலால் விபரீதம்: அடித்துக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்!

நேற்று முன்தினம் இரவு மனைவியை அடித்துக் கொலை செய்த பின்னர் கணவர் தற்கொலை செய்த சம்பவத்திற்கு திருமணத்திற்கு அப்பாலான காதல் உறவே காரணமென்பது தெரிய வந்துள்ளது.

கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு மரணங்களும் நேற்று முன்தினம் (9) இரவு பதிவாகின.

திருமணமான தம்பதிக்குள் மூன்றாவது நபர் நுழைந்ததை தொடர்ந்து இந்த கொலை இடம்பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுசந்த கந்தகே (39) மற்றும் பியுமி மதுஷிகா (28) ஆகியோரின் சடலங்களே வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மனைவியின் தலையில் அடித்துக் கொன்று விட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் சகோதரியை வீட்டுக்கு அழைத்ததால், மரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தம்பதிக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், கொலை நடந்த அன்று மாலை அவர் வீட்டுக்கு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் கணவன், மனைவிக்கிடையில் மோதல் ஏற்பட்டு, மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கு முன்னதாக தந்தை, சகோதரிக்கு விடயங்களை குறிப்பிட்டு கடிதங்கள் எழுதி வைத்துள்ளார்.

பின்னர் சகோதரியை தொடர்பு கொண்டு, அவசரமாக வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். எனினும், எந்த விடயங்களையும் கூறவில்லை.

சகோதரி வந்து பார்த்த போது, வீட்டில் இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment