பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் இளம் ஜோடியொன்று நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபடும் வீடியோ தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர.
அந்த வீடியோவில் உள்ள ஜோடியை அடையாளம் காணும் பணி இடம்பெறுவதுடன், அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர்.
வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடக இணையதளம் மூலம் ஒரு பெண் இந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளதாக சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிஐடியினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
அங்குச் சென்றிருந்த காதல் ஜோடியொன்று நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதன்போதே, அக்காட்சிகள் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.