நாட்டில் நேற்று 4,562 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 436,081 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 55,098 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று 14,394 பேர் குணமடைந்து வெளியேற்றியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 371,992 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் 216 கோவிட் -19 தொடர்பான இறப்புகள் உறுதி செய்யப்பட்டன.
அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1