29.2 C
Jaffna
April 28, 2024
இலங்கை

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றாளர் மூவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றாளர் மூவர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூவர் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், வவுனியா நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

குறித்த மூவரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 8 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: 5 பொலிசாருக்கு ஆயுள்தண்டனை!

Pagetamil

வைத்தியசாலை செல்லும் வழியில் சிறுமி உயிரிழப்பு!

Pagetamil

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: கிளிநொச்சி மக்களுக்கு அறிவிப்பு!

Pagetamil

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

Pagetamil

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

Leave a Comment