29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

முடக்கல் கோரிக்கைகளின் பின்னணியில் சர்வதேச அழுத்தம்?: கோட்டா அரசுக்கு வந்த சந்தேகம்!

நாட்டை முடக்குமாறு 10 பங்காளிக்கட்சிகள் கோரிக்கை விடுத்ததன் பின்னணியில் சர்வதேச அழுத்தம் இருக்கிறதா என பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.

இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் காமினி லொக்குகே, அமைச்சரவையுடன் விவாதிக்காமல் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். அத்துடன், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் சில அரசாங்க உறுப்பினர்களின் செயல்களுக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்தில் 10 கட்சிகள் கலந்துரையாடி ஜனாதிபதியுடன் ஒரு உடன்பாட்டை எட்டினாலும், பின்னர் அவர்கள் ஒரு கடிதத்தை வெளியிட்டனர். இந்த சந்திப்பின் போது அவர்கள் ஜனாதிபதியிடம் தங்கள் கவலைகளை எழுப்பியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியை கோரினார்.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்திருந்து கொண்டு, அமைச்சரவை பொறுப்புக்களையும், அதன் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது ஏற்க முடியாதது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment