27.2 C
Jaffna
December 5, 2023
சினிமா

காதலர் பிரிந்த சோகத்தில் விபரீதம்: காஞ்சனா 3 நடிகை தற்கொலை!

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் பேயாக நடித்த ரஷ்ய நாட்டு மொடல் அழகி அலெக்ஸாண்ட்ரா ரி-ஜாவி (24) வடக்கு கோவாவின் சியோலிமில் உள்ள ஆக்சலில் தனது வாடகை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த இவர் மொடலிங், திரைப்படத்துறையில் பணியாற்றுவதால் இந்தியாவில் தங்கியிருக்கிறார்.

சென்னையில் உள்ள ஒரு புகைப்படக்காரர் மீது தன்னை பிளாக்மெயில் செய்ததாகவும், பாலியல் உதவிகள் கோரியதாகவும் அவர் 2019 ல் முறைப்பாடளித்திருந்தார். இது பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் சனிக்கிழமை மீண்டும் வெளிவந்திருந்தன.

எனினும், அவரது மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு வழக்கு விவகார சமூக ஊடக பதிவுகளிற்கும் தொடர்பிருப்பதாப தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 20ஆம் திகதி அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை அலெக்ஸாண்ட்ராவின் ஆண் நண்பர் அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும், இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸூக்கு ஜோடியாக ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக அலெக்ஸாண்ட்ரா ரி-ஜாவி நடித்திருந்தார் . வில்லன் குரூப்பால் கொல்லப்படவே பேயாக வந்து வில்லன்களை பழிவாங்குவதாக அந்த காட்சிகள் அமைந்திருந்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

‘அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவன்’: நடிகர் சூர்யா

Pagetamil

5 மொழிகளில் சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை

Pagetamil

‘திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்’: நடிகை ஷீலா அறிவிப்பு

Pagetamil

‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு ரூ.60 கோடி கடன் பிரச்சினை: தயாரிப்பாளர் கே.ராஜன் தகவல்

Pagetamil

மன்னிப்பு கேட்டுவிட்டதால் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: காவல் துறைக்கு நடிகை த்ரிஷா கடிதம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!