26.3 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இந்தியா

மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்றுவிட்டேன் என்ற நித்யானந்தா!

கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கைது காலகட்டம் என்பதால் கைது நடவடிக்கைகள் முடங்கி உள்ளது.

இதை பயன்படுத்தி நித்யானந்தா சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாடுகிறார். நேற்று அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். தொடர்ச்சியாக 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது, இனி ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு ஆசி வழங்கப்படுகிறது.

மேலும் அவரது பெயரை 293-வது ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்றும் மாற்றி கொண்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தில் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 2019-ம் ஆண்டு அந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றார்.

இந்நிலையில்தான் நித்யானந்தா தற்போது தன்னை மதுரை ஆதீனம் என அறிவித்து கொண்டதோடு, பதவி ஏற்றுக்கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த பதிவில் அருணகிரி நாதருடன் தான் பழைய படத்தையும் சேர்த்து பதிவிட்டு உள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment