ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒரு சுயாதீன தீர்ப்பாயம் அவிஷ்க குணவர்தனாவை இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மே மாதத்தில் விடுவித்து. அவர் கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுவதாக அறிவித்தது.
குணவர்தன, ஆறு டெஸ்ட் மற்றும் 61 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார், அவர் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் குழுவில் ஈடுபட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தான் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான் போராளிகள், முன்பு இருந்ததைப் போலவே கிரிக்கெட் தொடரலாம் என்று அறிவித்திருந்தனர்.