வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் சார்பில் தெரிவான 30 உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வடமாகாணசபையின் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன தீர்மானமொன்றை அரசாங்கத்திற்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சீ.வீ.கே.சிவஞானம், எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், பொ.ஐங்கரநேசன், இ.ஜெயசேகரன், அனந்தி சசிதரன், ச.சுகிர்தன், சிவயோகன், விந்தன் கனகரட்ணம், தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1