கான்பூரில் உள்ளூர் சூதாட்ட கும்பலை பிடிக்க முயற்சித்தபோது போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் சிலர் சூதாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சித்துள்ளார்.
மேலும், சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி யாதவை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் கான்பூரில் பூதாகரமாக வெடிக்கவே, எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்தனர்.
https://t.co/R6xsHpUV4r pic.twitter.com/oktTiMghWl
— Kanpur Dehat Police (@kanpurdehatpol) July 17, 2021
இதற்கிடையில், கான்பூர் தேஹாட் காவல்துறை கண்காணிப்பாளர் சவுத்ரி, மகேந்திர படேலை விசாரித்து வருவதாகவும், தற்காலிகமாக அவரை கான்பூர் காவல் பணியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதகவும் தெரிவித்தார்.
மேலும், காவல்துறை தரப்பில் யாதவ் குடும்பத்தினர் வைத்துள்ள புகாரை மறுத்துள்ளனர். சம்பவத்தன்று யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முயற்சித்த போது, யாதவை மட்டும் கைது செய்ய அவரது குடும்பம் தடுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் சப் இன்ஸ்பெக்டர் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கான்பூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், சப் இன்ஸ்பெக்டரின் வீடியோ வைரலாகி வருகிறது.