பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் இன்று முடக்கப்படவுள்ளன.
வல்வெட்டித்துறை, ஆதிகோயிலடி மற்றும் பருத்தித்துறை 2ஆம் குறுக்குத்தெருவில் முடக்கப்பட்ட பகுதியை அண்மித்த இடங்கள் இன்று முடக்கப்படுமென அறிய முடிகிறது.
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
பருத்தித்துறையில் முடக்கப்பட்டுள்ள 2ஆம் குறுக்குத் தெருவை அண்மித்த பகுதிகளில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி பகுதியில் சில கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, கடந்த 12 ஆம் திகதி பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. 156 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 9 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஆதிகோயிலடியை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாத்திரம் 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து இன்று மதியமளவில் அந்த பகுதி முடக்கப்படும்.
அந்த பகுதியில் 209 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் நாளை வெளியாகும்.
ஏற்கனவே முடக்கப்பட்ட பருத்தித்துறை 2ஆம் குறுக்குத்தெருவை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 18 பேருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து, ஏற்கனவே முடக்கப்பட்ட 2ஆம் குறுக்கு தெருவை அண்மித்த பகுதிகளும் இன்று முடக்கப்படும்.