இங்கிலாந்து அணியில் ஏழு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான புதிய அணியைத் தேர்வு செய்யும் நெருக்கடியில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் சிக்கியுள்ளது.
மூன்று இங்கிலாந்து வீரர்கள் மற்றும் நான்கு அணியுடன் தொடர்புடைய ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, அணி வீரர்கள் அனைவரும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.
காயம் காரணமாக பல வாரங்களாக ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்குத் திரும்புவார். பாகிஸ்தானிற்கு எதிரான அணியின் ஏனைய வீரர்கள் இனி பெயரிடப்படுவார்கள்.
கொரோனா தொற்றிற்குள்ளான இந்த 3 வீரர்களும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.