29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா

பணம், செல்போனுக்கு ஆசைப்பட்டு கொரோனா நோயாளி கொலை: மருத்துவமனை ஊழியர் கைது!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளியை கொலை செய்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் பேராசிரியராக பணிபுரியும் மௌலி என்பவரது மனைவி சுமிதா கொரோனா சிகிச்சைக்காக, கடந்த மாதம் 22 ஆம் திகதி,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும்,மருத்துவமனையின் 3 வது மாடியில் ஆக்சிஜன் உதவியுடன் சுமிதா சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, சுமிதாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு அவரது கணவர் மௌலி மே மாதம் 23ம் திகதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது,சுமிதா மருத்துவமனை படுக்கையில் இல்லை.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் மௌலி தகவல் கொடுத்துள்ளார். அதன்பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் சுமிதாவை தேடித் பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியுற்ற மௌலி அருகில் உள்ள பூக்கடை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து,பேராசிரியர் மௌலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனது மனைவியை தேட முடியாத நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து, சுமிதாவின் உடல் கடந்த ஜூன் 8 ஆம் திகதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 8 வது மாடியில் உள்ள மின்பகிர்மான அறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், நோயாளியை கொலை செய்த வழக்கில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,செல்போன் மற்றும் பணத்திற்காக சுமிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ரதிதேவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க பொலீசார் திட்டமிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள…” – சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

Pagetamil

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

Pagetamil

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment