29.2 C
Jaffna
April 28, 2024
கிழக்கு

கல்முனையில் கடலில் மூழ்கி மாணவன் பலி: பயணத்தடைக்குள் குளிக்க சென்றபோது துயரம்!

நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவனான அக்ஸயன் (17) இன்று மாலை கல்முனைக்கடலில் மூழ்கி இறந்துள்ளார்.

உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளது.

மரணித்தவரின் உடல் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு பயணக்கட்டுப்பாட்டில் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசு கட்சி இரத்ததானம்!

Pagetamil

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர்

Pagetamil

வாகரையில் மக்கள் போராட்டம்

Pagetamil

திருகோணமலையில் இளம் யுவதியின் உயிரைப்பறித்த சாரதி தப்பியோட்டம்!

Pagetamil

வாழைச்சேனையில் இருவர் பலி

Pagetamil

Leave a Comment