வீட்டுக்கு மரக்கறி வாங்குவதற்காக மனைவி தந்த பணத்தை கூது விளையாடி செலவிட்டதால், இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரக்கட்டு காட்டுப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றது.
வேப்பவெட்டுவான் வீதி, பாலர்சேனையை சேர்ந்த செங்கல் வாடியில் கூலித் தொழிலுக்கு செல்லும் 20 வயதுடைய நடராசா தினேஷ் என்பவரே தூக்கிட்டு மரணமடைந்தவராவார்.
ஒரு பெண் குழந்தையின் தந்தையான இவர், நேற்று முன்தினம் (05) மதியம் மரக்கறி மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக மனைவியிடம் 1000 ரூபா பணம் பெற்றுச்சென்று, அப்பணத்தை சூது விளையாடி தோற்றதால், மரக்கறி வாங்க முடியாமல் வீடு திரும்பிய போது மனைவியுடன் முரண்பட்டு வெளியேறிச் சென்றே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரிய வந்தது.
பிசிஆர் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.