30.4 C
Jaffna
April 18, 2024
இலங்கை

பிறந்தநாள் கொண்டாடிய மேலும் 7 பேர் தனிமைப்படுத்தலில்!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் இன்று (04) கைது செய்யப்பட்ட 7 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 7 பேருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திடம் அறிவித்திருந்தனர்.

அதன்படி, குறித்த 7 பேரில் 6 பேர் பசறை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அங்கு 14 தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

மற்றுமொரு முதியவர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரினால் குறித்த பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட குறித்த 7 பேரும் இன்று காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பியூமி வெளியிட்ட வீடியோவில், ஹிரு வலையமைப்பு உரிமையாளரின் பின்னணியில் பழிவாங்கல் இடம்பெறுவதாக குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

Pagetamil

இலங்கையிலுள்ள பழங்கால ஒலிபெருக்கி சாதனங்களை கடத்தும் இந்தியர்கள்!

Pagetamil

இலங்கையில் ஒருவரின் மாதாந்த அடிப்படை தேவை செலவு ரூ.16,975

Pagetamil

ரூ.1900 கொத்துக்கடை உரிமையாளருக்கு பிணை!

Pagetamil

Leave a Comment