28.2 C
Jaffna
February 14, 2025
Pagetamil
இந்தியா

நீர்வீழ்ச்சியில் போட்டோ ஷூட் நடத்திய போது சுழலில் சிக்கி 3 இளைஞர்கள் பலி!

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தீகலவலசை நீர்வீழ்ச்சியில் போட்டோஷூட் நடத்திய இளைஞர்கள் மூன்று பேர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாடேரு கிராமத்தை சேர்ந்த நிரஞ்சன்,வினோத்குமார், நாகேந்திர குமார் ஆகியோர் தீகலவலசை நீர்வீழ்ச்சிக்கு சென்று மகிழ்ச்சியுடன் போட்டோஷூட் நடத்தி கொண்டனர்.

தண்ணீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்திய போது இளைஞர்கள் மூன்று பேரும் அங்குள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். மூன்று பேரின் ஆடைகளும் நீர்வீழ்ச்சியின் அருகில் இருப்பதை பார்த்த கிராமத்தினர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததை உறுதி செய்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீச்சல் வீரர்கள் உதவியுடன் 3 பேரின் உடல்களையும் தேடி வருகின்றனர். போட்டோஷூட் நடத்தும் போது நீரில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பள்ளி மாணவிக்கு விவாகம் – 5 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

Leave a Comment