30.5 C
Jaffna
March 28, 2024
சினிமா

‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம் உருவாகிறது ; உறுதி செய்த இயக்குனர்!

மரகத நாணயம் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் உறுதி செய்துள்ளார்.

2017-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஏஆர்கே சரவணன். விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைப் பெற்ற இபபடத்தின் மூலம் சரவணன் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றார்.

தற்போது மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை சரவணன் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “மரகத நாணயம் இரண்டாம் பாகத்திற்க்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன்..

அதற்கு முன்பு.. சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவுங்கவுள்ளேன்..இவற்றையெல்லாம் விட.. கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் வேண்டுதல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டாம் பாகத்தில் ஆதி உள்ளிட்ட முதல் பாகத்தின் குழுவினர் இடம் பெறுவார்களா? இல்லை வேறொரு குழுவுடன் உருவாக உள்ளதா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.சரவணன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கவிருக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment