பிக் பாஸ் புகழ் பாடகிக்கு வந்த தவறான அழைப்புகள்; பொலீசில் புகார்!

Date:

பாடகி மதுப்பிரியா தனக்கு கடந்த இரண்டு மாதமாக போனில் வந்த தவறான கால்கள் பற்றி பொலீசில் புகார் அளித்து உள்ளார்.

பிரபல பாடகி மதுப்பிரியாவுக்கு போனில் தவறான அழைப்புகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆபாச கமெண்டுகள் வந்ததால் அது பற்றி பொலீசில் புகார் அளித்துள்ளார். பிக் பாஸ் தெலுங்கு முதல் சீசனில் கலந்துகொண்ட அவர் இப்படி ஒரு புகாரை தற்போது கூறி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. மதுப்பிரியா தெலுங்குல பல பாடல்கள் பாடி உள்ளார்.

அவருக்கு தினம்தோறும் தெரியாத நம்பர்களில் இருந்து அதிக அளவு போன் கால்கள் வந்துகொண்டே இருந்ததாம், அது நிற்காததால் வேறு வழியின்றி அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். கடந்த இரண்டு மாதமாக இப்படி நடந்து வந்ததாக அவர் கூறியதாக போலீஸ் தெரிவித்து உள்ளது.

இது பற்றி போலிசார் IPC 509 மற்றும் 354(B) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள பொலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுப்ப்ரியாவுக்கு தொடர்ந்து போனில் தொல்லை கொடுத்த நம்பர்களையும் போலீசிடம் கொடுத்திருக்கிறாறாராம். அதை வைத்து போலீசார் அந்த நபர்களை கண்டுபிடித்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபலங்களுக்கு இப்படி தொல்லைகள் வருவது வாடிக்கையாகிவிட்ட இந்த காலகட்டத்தில் அதை பற்றி போலீசில் தைரியமாக புகார் அளித்த மதுப்பிரியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்