இலங்கையில் நேற்று 44 கொரோனா மரணங்கள் பதிவாகியது. நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய கொரோணா மரண எண்ணிக்கை இதுவாகும்.
மே மாதம் 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 1,132 ஆக உயர்ந்துள்ளது.
மரணித்தவர்களில் 23 பேர் 71 வயதுக்கு மேற்பட்டவர்கள். 61 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 11 பேர். 51-60 வயதுக்குட்பட்டவர்கள் 07 பேர். 31-40 வயதுக்கு இடையில்
2 பேர். 21 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு நபர் உள்ளடங்குகின்றனர்.
அடவீரகொல்லேவ, ஹோராம்பெல்ல, அம்பலங்கொட, கலல்கொட, ஹிண்டகலா, புலத்சின்ஹல, ஹொரன, கல்பத, குடவாஸ்கடு, பிஹிம்புவ, அனுராதபுரம், மன்னார், ரத்கம,
இமடுவ, மாகோன, மத்துகம, வேயங்கொட, அதுருகிரிய, சேவநகல, மல்லேவ, கிரிமெத்தியாவ, மேல் கட்டுனேரிய, கண்டி, பரகஸ்தோட்ட, வடக்கு களுத்துறை, வலல்லாவித, பேருவளை, பயகல, கொழும்பு 12, கொழும்பு 02, போல்காசோவித, காலி, நகாவத்த, ராகமா, பன்னிபிட்டி, போமகம, நாரங்கொட, கணேபொல, கோகரெல்ல, அலஹிட்டியாவ, பிண்டகொல்ல, பண்டரகோஸ்வத்தவை சேர்ந்தவர்களே மரணித்தனர்..