26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மன்னாரில் ஏராளம் ஏக்கர் காடழிப்பு: பின்னணி யார்?

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கஜூவத்தை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக முசலி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேசத்தில் உள்ள கால் நடைகளை மேய்ச்சலிற்காக விட இடம் இல்லாத நிலை காணப்படுகின்ற நிலையில், கஜூவத்தை பகுதியில் உள்ள பல ஏக்கர் அடர்ந்த காடுகள் அரசின் ஒத்துழைப்போது அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு தீ வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மாடு மாய்க்கச் சென்றவர்கள் தமது கையடக்க தொலைபேசியில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக முசலி பிரதேச சபையின் தவிசாளரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவிக்கையில்,

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கஜூவத்தை பகுதியில் அண்மைக்காலமாக பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது. யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடம் பெற்று வருகின்றது என்பது தெரியவில்லை.

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகளை அழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

Leave a Comment