மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பலமீன்மடு கிராம சேவகர் பிரிவுகளும்,
காத்தான்குடிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருச்செந்தூர்,கல்லடி வெல்லூர் கிராம சேவகர் பிரிவுகள், நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்து ஏனைய கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.





