பிரித்தானியாவின் பாசிங்ஸ்டோக் மற்றும் டீன் போரோ (Basingstoke and Deane Borough) கவுன்சில் உறுப்பினராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஜெய் கணேஷ் உறுப்பினராக வெற்றியீட்டியு்ளார்.
மே 6 வியாழக்கிழமை பாசிங்ஸ்டோக் மற்றும் டீன் போரோ கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. கன்சர்வேடிவ் கட்சியில் போட்டியிட்ட ஜெய் கணேஷ் வெற்றியீட்டினார்.
சமூக செயற்பாட்டில் ஈடுபாடு கொண்ட ஜெய் கணேஷ், கழிவு முகாமை எடுக்கும் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நிகழ்வுகளை தனது சுற்றுப்புறத்தில் தவறாமல் ஏற்பாடு செய்கிறார்.
ஜெய் கணேஷ் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆரம்ப கல்வியை சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் கற்றார். முடித்தார். நன்கு அறியப்பட்ட தொழிலதிபர் ‘சீப் சைட்’ தம்புசாமியின் பேரன் ஆவார்.
லண்டன் பெருநகர பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுற்றுலா நிர்வாகத்தில் பட்டம் பெற்ற அவர், பிரிட்டனில் உள்ளூர் அரசாங்கத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றினார்.
ஜெய் தனது மாணவ பருவத்தில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேரமாகப் பணியாற்றினார்.