மே 30 வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
இது தவிர, அனைத்து கூட்டங்களையும் ரத்துசெய்வதற்கும், வணிக நிறுவனங்களில் நுழையக்கூடியவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், நாட்டின் அத்தியாவசிய சேவைகள் பராமரிக்கப்படுவதற்கும் சரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1