ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தனது அலுவலகத்தில் யுவதியிடமிருந்து ரூ .50 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துக்கான பாதை அனுமதி வழங்க இந்த இலஞ்சத் தொகையை அவர் கோரியுள்ளார்.
இதன்படி, யுவதி பணத்தை வழங்கிய போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து, குறிப்பிட்ட அதிகாரியை கைது செய்தனர்.
வெலிமட பகுதியை சேர்ந்த அந்த யுவதியிடம் அவர் பாலியல் இலஞ்சமும் கோரியுள்ளார். பணத்தை பெற்ற பின்னர் யுவதியை பிறிதொரு இடத்திற்கு அழைத்து செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
2