வடக்கில் இன்று 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீடத்தில் 660 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், யாழ் மாநகரசபை சுகாதார அதிகாரி பிரிவில் 2 பேர், கரவெட்டி, கோப்பாய், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒருவர், தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவர், யாழ்ப்பாண சிறைச்சாலையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1