30.9 C
Jaffna
April 16, 2024
இலங்கை

மின்சாரசபை ஊழியர்கள் சுகயீன விடுப்பு!

பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (08) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்தார்.

சுமார் 25 ஆயிரம் மின்சார ஊழியர்கள் கொழும்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நூற்றுக்கு 25 சதவீத சம்பள அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராஜங்க அமைச்சர் பயணித்த கார் தீப்பிடித்தது!

Pagetamil

யாழ் புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச, தனியார் பஸ்களை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

Pagetamil

யாழில் இராணுவம் தேர் இழுத்த கோயிலில் வெடித்தது அடுத்த சர்ச்சை… இளைஞர்கள் உடைத்தது சாதிய வேலியா?

Pagetamil

யாழில் கொரோனா தொற்றினால் பெண் பலி

Pagetamil

2 வருட காதலை முறித்த 17 வயது சிறுமி மீது துப்பாக்கிச்சூடு: 40 வயது காதலன் வெறிச்செயல்!

Pagetamil

Leave a Comment