31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கடலட்டை இனப்பெருக்க நிலையம் திறந்து வைப்பு

கடற்தொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கடலட்டை இனப்பெருக்க நிலையம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தேசிய நீர் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்தினவின் அழைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடலட்டை உற்பத்தியை நேரடியாக பார்வையிட்டதோடு உரிய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உட்பட திணைக்கள தலைவர்கள், அமைச்சின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment