இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக இலஞ்சமாக பெற்ற பணத்தை விழுங்கிய பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கியுளளார்.
ஒரு வாகன விவகாரத்தில் நபர் ஒருவரிடம் 10,000 ரூபா இலஞ்சம் கோரியிருந்தார். நேற்று 5,000 ரூபா தாள்களாக அந்த பணத்தை வழங்கினார்.
அந்த நேரத்தில் அதிகாரிகள் அங்கு திடீரென நுழைந்து அவரை கைது செய்ய முயன்றபோது, இரண்டு தாள்களையும் விழுங்கி விட்டார்.
பொலிஸ் பொறுப்பதிகாரி தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1