குற்றம்

பொலிஸ் நிலையத்தில் மனைவியின் முகத்தில் அசிட் வீசிய கணவன்!

பொலிஸ் நிலையத்தில் கணவரின் அசிட் தாக்கிதலால் கடுமையான காயங்களுக்கு ஆளான பெண்ணொருவர் காலி-கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் நேற்று (21) காலை காலியில் உள்ள உடுகம பொலிஸ் நிலையத்தில் அசிட் தாக்குதலை நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

தம்பதியினரிடையேயான ஏற்பட்ட குடும்ப தகராறு குறித்து விசாரிக்க பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர். அங்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனைவியின் முகத்தில் திடீரென அசிட் வீசினார்.

அசிட் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார்.

சந்தேகநபர் உடுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் 28 வயதுடையவர். சந்தேகநபரான கணவர் 32 வயதுடையவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்டாயமாக கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க ரூ.1000 கொடுத்தவர் கைது!

Pagetamil

மோசடியில் ஈடுபட்ட அழகுக்கலைஞர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Pagetamil

நெல்லியடியில் கஞ்சா பொதியை கைமாற்ற காத்திருந்த இளைஞன் கைது!

Pagetamil

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவு!

Pagetamil

யாழில் ஒரு மாத காதலியுடன் தியேட்டருக்கு சென்ற காதலனுக்கு ஏற்பட்ட கதி: இரண்டு யுவதிகளை தேடும் பொலிசார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!