29.5 C
Jaffna
March 28, 2024
உலகம்

அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திய பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து, உலகளவில் பல நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

எனினும், அண்மைகாலமாக ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனேகாவின் தடுப்பு மருந்தால் இரத்த உறைவு ஏற்படுவதாக முறைப்பாடுகள் எழுந்து வருகிறது. இதனால் அந்த தடுப்பு மருந்துக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தற்காலிக தடை விதித்தன. ஆனால் ஒக்ஸ்போர்டின் தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.

இதையடுத்து தற்போது மீண்டும் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிக்கு பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தான் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை செலுத்தப் போவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி பிரதமர் ஜோன்சன், அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை நேற்று செலுத்திக் கொண்டார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் சிறந்த வழி. அனைத்து விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் நன்றி, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment