வெள்ளவத்தை விபத்தில் மேலுமொருவர் பலி!

Date:

வெள்ளத்தையில் இன்று (6) காலை மதுபோதை நபர் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒருவரே உயிரிழந்தார்.

இதன்மூலம், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

வெள்ளவத்தை ராஜசிங்க மாவத்தையின் அருகே, இரவு விடுதியிலிருந்து மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதியதுடன், தொடர்ந்து பயணித்து நடந்த சென்று கொண்டிருந்தவர்களையும் மோதினார்.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 57 மற்றும் 77 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகனத்தில் மதுபோதையில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான வழிகளை பென்டகன்...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு...

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்