26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் 04வது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 04வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இப் போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பலக்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட அரசியற் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் ஆரவினை நல்கி வருகின்றனர்.

வடகிழக்கில் தமிழ் மக்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதாகவும், ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும், அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் சரியான முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 04வது நாளான இன்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் (ஜனா), கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் திருகோணமலை

east tamil

வெளிநாட்டு பெண்ணை காதலித்த நபர் தற்கொலை

east tamil

பெரிய நீலாவணையில் மக்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட பதற்றம் – சுமந்திரன், சாணக்கியன் விரட்டியடிப்பு?

east tamil

கல்வியை விட அதிக நிதி இராணுவத்துக்கு எதற்கு? – ஜோசப் ஸ்டாலின்

east tamil

காங்கேயனோடை கிராமத்திலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

east tamil

Leave a Comment