சுழற்பந்து வீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை சுருட்டினர்: 8 தோல்விகளின் பின் இலங்கை வெற்றி!

Date:

ரி20 போட்டிகளில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்து நொந்து போயிருந்த இலங்கை அணி இன்று, மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டியது.

இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை கட்டிப்போட, 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தனுஷ்க குணதிலக்க 56 ஓட்டங்களையும் பதும் நிஸங்க 37 ஓட்டங்களையும் அசேன் பண்டார 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தினேஷ் சந்திமல், திசர பெரேரா ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் பிராவோ 25 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

பதிலுக்கு 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதிகபட்சமாக ஒபேய் மெக்கொய் 23 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். கிறிஸ் கெய்ல் 16, பொலார்ட் 15 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் லக்ஸன் சந்தகன் 10 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 16 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர 26 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அகில தனஞ்ஜெய 13 ஓட்டங்களிற்கு 1 விக்கெட்.

ஹசரங்க ஆட்டநாயகன்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்